Friday, May 24, 2019

Leadership and Management lessons from India Lok Sabha elections 2019

Wow!!! The world's biggest democratic elections just concluded and BJP led NDA stormed back to power. BJP is even more stronger than it was 5 years ago. As of now, they look good to continue the same momentum in 2024 also. Congress on the other hand, improved their personal tally by ~10 seats, but is nowhere close to BJP. Various reasons led to this result and let me analyze a few from my perspective and let's see if there are lessons for someone like me (who's in a leadership position in a reputed Software Services / Consulting organization).

1. Rural programs helped BJP massively: 

In my opinion there are 5 programs initiated by the NDA government helped them massively in this election. They are Electrification of villages (technically NDA didn't initiate it, but worked towards 100% rural electrification), Infrastructure (roads), LPG Cylinders for rural / tribal areas, Toilets (as per one count over 9cr toilets were built) and cheap housing. These programs were underestimated by Indian media (and hence by default, Congress party). We can't fathom the importance of these programs from the comfort of air-conditioned rooms, where we are entitled to these facilities. The fact that there was a need for 9 crore toilets (and maybe a lot more in their 2nd term) shows the apathy of the previous governments towards these marginalized areas of our society. Maybe those who were benefited, felt that 'at last there is one government which cares about me'.

Management Lesson-1: While we all understand the importance of customer's senior management, each one of us should identify our real customers. Work sincerely towards solving their day to day issues. They will appreciate the efforts and it will payback. 


2. Identifying the right coalition partners:

BJP mastered this well, even though Congress had a lot of past experience. Amit Shah, the brain behind BJP's election strategy (and rightly called as BJP's Chanakya) stitched crucial partnerships, specifically in Maharashtra (Shiv Sena) and Bihar (JD-U). In fact, the partnership with Shiv Sena was a difficult one, as Shiv Sena was criticizing the government for past several months. Still BJP went ahead and formed a partnership and it reaped electoral benefits. On the other hand, Congress, even though were with a partnership with JD-S in Karnataka and NCP in Maharashtra, made a mess of everything and ended up losing both states. Who knows what would've been the result if Congress and coalition won 50+ seats from these two states?

Another smart part is that BJP didn't form any alliance more than it was necessary. Just shook hands with few partners and the right ones.

Management Lesson-2: In real life projects, we may have to work with internal practices, external partners and even some times, other vendors of the customer. We need to know where to drop our ego and manage a tough relation, without conceding our space. At the same time, we shouldn't have too many cooks than what's necessary. It is an art and there is no magic pill. But one who masters it, ensures a successful project delivery. Another aspect is to ensure these logistics are managed well on time. Too late might be too little.


3. Vocal chord and dirty hands:

Narendra Modi shouldered the major burden of campaigning, while Amit Shah shouldered the booth-wise planning connecting with the ground-level workers. Even the campaigning was themed around Modi, with some help from Lutyens media and the opponents, making it easier for others to focus on the nitty-gritties of booth level activities. I am not sure if Congress had such strategy on the first place, let alone implement it. In Congress, everyone was shouting at NDA (Modi to be specific), with very little time towards booth workers. Priyanka Gandhi's day or two chat with them is more of a photo-op than anything else. Congress also made noise about Priyanka Gandhi taking on Modi, but then pussy-footed at last minute. I am sure a ground level worker would've been demoralized by such acts.

Management Lesson-3: Let's be clear on who is talking and who will dirty their hands and manage the nuts and bolts of the project. Obviously, there needs to be a terrific understanding between these two, so that the commitments are practical. The team needs someone to translate these customer-centric rhetoric to an action plan that they can understand and follow in their day to day life. A lack of it will kill the project and a lack of someone who can talk to the customer might give negative impressions. Both are important; both should be managed well; both needs to go hand in hand.


4. Managing the negativity:

One of the best aspect of BJP/NDA's campaign in this election is managing all the negative news and giving a positive spin to it, wherever possible. 

Let's take the (in)famous "Chowkidhar Chor Hai" slogan of Congress. I thought it was a great slogan until Rahul Gandhi overdid it and messed it up by pulling Supreme Court to justify it. If left unattended, this would have severely dented BJP/NDA's chances. BJP adopted 2 pronged strategy. On one hand they started fighting with Congress legally, where Rahul Gandhi had to personally apologize to Supreme Court. On the other hand, Modi gave a positive spin to it by changing his twitter handle to "Chowkidhar Modi", which was repeated by 1000s of his followers. Even the news of Rahul Gandhi apologizing in Supreme Court was repeated enough times to take the steam out of this campaign. 

Second incident was Sadhvi Pragya bad-mouthing Mahatma Gandhi and praising Nathuram Godse. Congress failed to capitalize on this and BJP was quick to take the narrative of this in mainstream media. Modi himself said he will not forgive her, but then didn't remove her candidature. None of their partners commented on it, except Nitish Kumar. Even Nitish punched with kids gloves and washed off saying that it was BJP's internal matter.

Management Lesson-4: Our teams will do mistakes. People will utter loose-words. As Managers, we need to know how to give a positive spin to this. At least, we need to know how to do damage control. For every corrective action we put in place, the "talker" (from point-3) should be managing the messages with the customer. We also need a good relationship with our well-wishers in customer environment. They are the ones who can advocate your case. At times, they can even punch you (with kids gloves of course) and you can show a sorry face to save the project.


5. Who moved my cheese sorry seats:

In the last elections, BJP won 73 seats from UP. As per the conventional projections, before election, they were supposed to win around 45-50 seats (I was personally thought they will win not more than 45 seats). They started preparing for this shortfall. In a classic "Who moved my cheese" strategy, BJP focused on West Bengal, Odisha and NE to make up for these numbers. The cherry on the cake was that UP produced ~10 more seats and their efforts in WB and Odisha paid off too.

Management Lesson-5: Software industry is a cut-throat competitive industry. You may win some, you lose some. But an astute leader will always know where their risk is and where to make up for their short fall. It could be in terms of efforts or growth numbers. As the saying goes 'when one door closes, another opens', there will always be one opportunity in lieu of another. A little bit of planning will save a lot of Gelusil and Eno.


6. People see through fake acting:

One of the biggest mistakes of Lutyens media and Congress is that this election was about Hindutva and Secularism. I agree that BJP unabashedly proclaims Hindutva as an ideology. But they were saying that in 2009 also. Why they lost then and won in 2014 and now? The truth is that it is only a certain section of people who buy BJP's Hindutva unconditionally. Rest of them are first inspired by what BJP has done to them (or others haven't); their acceptance of Hindutva is their way of acknowledging this. For them Hindutva is not an ideology; its just a token of respect shown in return to what they received. Congress fell for this trap and started double-action movie. Rahul and Priyanka sported Sacred Ash, Sandal paste and Rudraksh in UP and MP; but were wearing skull cap and cross in Wayanad. People can't be fooled every time. They saw through this and the result is ugly. BJP on the other hand just stuck to their theme.

Management Lesson-6: Listen to everything. Form your opinion. DELIVER IT IN YOUR STYLE. Never imitate someone's style if that doesn't suit you, however successful that may be. You are better off being moderately successful in your style than to be highly successful pretending to be something that you are not comfortable. You will not be able to sustain it and when the mask falls away, it looks uglier.

Winning elections is an art; repeating it is masterpiece. So is Leadership and Management (at least in Software Industry, where I work).

Sunday, March 24, 2019

சங்கத் தமிழ் இலக்கியங்களில் கடவுளைப் பற்றி கூறியிருக்கிறதா?

சங்க காலத்தை பற்றி நாம் நமது இலக்கிய நூல்களிலிருந்தே அறிகிறோம். எனவே "சங்கத் தமிழ் இலக்கியங்களில் கடவுளைப் பற்றி கூறியிருக்கிறதா?" என்ற வினாவினைக் கொண்டே இந்த விடையை அணுகுவதே சரி.

சங்க இலக்கியங்கள் யாவை?
முதலில், இந்த வினாவிற்கு விடையை அறிந்து கொள்வோம். பொதுவாக, எட்டுத்தொகை மற்றும் பத்துப் பாட்டு ஆகியவை. சிலர் பதினெண் கீழ் கணக்கு நூல்களையும் சேர்ப்பதுண்டு.

இவற்றில் கடவுளரைப் பற்றி கூறப்பட்டுள்ளதா?
இந்த இலக்கிய நூல்கள் பலவும் கடவுள் வாழ்த்தைக் கொண்டு தொடங்குகின்றன. இவற்றில் அந்தந்த கடவுளரின் உருவ அமைப்பை விவரிக்கின்றன. உதாரணமாக புறநானூற்றின் வாழ்த்துப் பாடல், சிவபெருமானை விடையேறும் கடவுளாகக் கூறுகின்றது. இன்றும் நாம் சிவபெருமானை நந்தி வாகனனாகவே வழிபடுகிறோம்.

எனில், யார்?
சங்கத் தமிழ் இலக்கியங்களில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) பல இடங்களில் கடவுளரை பற்றிய குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. சிலவற்றை பகிர்கிறேன்:

எட்டுத்தொகை:
1. அகநானூறு கடவுள் வாழ்த்துப் பாடல்:
ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே (பரமசிவனார்)

2. புறநானூறு பாடல் 56
ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் (பரமசிவனார்)

கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும் (பலராமன்)

மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும் (திருமால்)

மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென (முருகன்)

3. பரிபாடல் பாடல் 1 முதல் 3
இப்பாடல்களில் திருமாலின் வருணனை இடம்பெற்றுள்ளது. மார்பில் (கௌஸ்துபம் என்று அறியப்படும்) மணியை அணிந்தவர் என்றும், திருமகளை தனது திருமார்பில் தாங்கியவர் என்றும் மற்றும் பல அவதாரங்களை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

3. கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடல்:
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:
படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?
கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?

கலித்தொகையில் வாழ்த்துப் பாடல் சிவபெருமானின் கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம் ஆகிய திருநடனங்களை பற்றி உரைக்கிறது. மேலும் முதல் கலியான பாலைக் காலையிலும் முக்கண்ணன் குறிப்பிடப்படுகிறார்.

சங்ககாலத்தை சற்றே தாண்டி பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளன (இவற்றை சங்க கால நூல்களாகக் கருதுவோரும் உண்டு).

பத்துப்பாட்டு:
4. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை முழுவதுமே கந்தவேளாம் முருகனைப் பற்றியதாகும். இதில் குறிப்பாக அடிகள் 89 முதல் 102 வரை முருகனது ஆறு முகங்களைப் பற்றிய விளக்கம் இடம்பெற்றுள்ளது.

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,
பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்;

ஒரு முகம், ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே;

ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே;

ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,
திங்கள் போலத் திசை விளக்கும்மே;

ஒரு முகம் செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே;

ஒரு முகம் குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்
மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;

5. நான்மணிக்கடிகையின் கடவுள் வாழ்த்து:
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும், நிறம். உரை
 
படியை மடியகத்து இட்டான்; அடியினான்
முக் கால் கடந்தான் முழு நிலம்; அக் காலத்து
ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்;-சோவின்
அருமை அழித்த மகன்.

விளம்பி நாகனார் திருமாலின் சக்கரத்திற்கு ஞாயிறையும், அவரது திருமுகத்திற்கு திங்களை ஒப்பிட்டு, திருமால் தனது அடியால் மூவுலகைத் தாண்டியமை, குன்றெடுத்து ஆவினங்களையும் ஆயர்களையும் காத்தமை ஆகிய நிகழ்வுகளை இந்த கடவுள் வாழ்த்து செய்யுளில் பதிகிறார்.

மேலும் திரிகடுகத்தில் வாமனன், கண்ணனின் வருணனை, பிற்காலத்தே வந்த சிலப்பதிகாரத்தில் ஆயர்குரவை என இன்னமும் கூறிக்கொண்டே போகலாம்.

ஆக, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல  இந்த மேற்கோள்களைக் காணுங்கால், சங்க இலக்கியங்களில் சிவபெருமான், திருமால், முருகன் போன்ற கடவுளரின் வருணனைகள் கொட்டி கிடக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

Monday, May 23, 2016

IPL and Reservation!!!

On the outset, I must confess that inspite of match fixing, unabashed commercialization, BCCI's big boy attitude etc. I am still a fan of cricket. I support Indian Cricket team (and RCB, now that CSK is no more) whenever possible. While, I was watching the latest edition of IPL, I noticed the following:

Lot of young (Indian) players are included in the squad (some of them bought at obscene prices). They seemingly perform great in such tournaments. But when some of them are selected to play in international matches, they fail miserably. Initially, I thought this was limited to certain individuals, but over a period of time the number increased. When I started thinking about the root causes, it came down to the following:

1. Conditions are heavily tailor made. Most of the cases it is favoring local players
2. Since players are bought in auctions, their true value is skewed (either way)
3. Inducing a false sense of belief that playing in such conditions is good enough to be world class
4. In general, T20 is about 90 mins of luck and stamina, whereas any other form of cricket is way different from this

Overall, the "so called champions" in such conditions come cropper when they play in different league and class.

Then it struck me - IPL to cricket is exactly what reservation is to education.

1. Conditions: Right from school level, the marks and grades are heavily lowered
2. Reservation masks the true value of the person
3. Induces false sense of belief that they are actually "highly qualified Engineers and doctors"
4. With a heavily lowered bar, the person's ability to push harder is reduced

This is why there is a gradual degradation of standards everywhere. These people suffer when they are put in real-competitive environment. And our politicians have already started to "fix" this problem by asking for "reservation in private sector". Only thing pending is reservation in H1Bs and Green cards (don't be surprised if you find them in the manifesto of some party in 2019 or 2024 elections).

What is the solution then (for both issues)?

1. Adjusting the playing conditions is not the right approach.Invest in improving the talent. In IPL, we have seen players like Gautam Gambhir, Virat Kohli, Dhoni etc. are playing well. In fact, these players play well in any condition and have proven it already. Similarly, properly groomed kids will shine in any field provided their basics are right. Setup schools everywhere (even exclusive coaching centers for certain groups of people). 

2. Make reservation (IPL selection) as a prize to be won rather than a throw away gift. This should follow step1. Qualified students maybe given preferences in colleges and qualified players in IPL

Now we are creating a system where we don't compromise on quality, while achieving proper social balance.

Friday, May 6, 2016

இதுதான் "செக்யுலரிசம்"

ஒரு தேசத்தை அழிக்க வேண்டுமென்றால்,  மக்களையோ, மாட மாளிகைகளையோ அழிக்கத்தேவையில்லை. அதன் வரலாற்றை அழித்தால் போதும். நாம் "நேற்றைய வரலாற்றிலிருந்து தான்" நமது "நாளைய எதிர்காலத்தைத் தொடங்குகிறோம்". நம் தமிழ் பண்பாட்டின் வரலாற்றை புரிந்து கொள்ள பெரிதும் உதவுவது நம் இலக்கிய நூல்கள். இதைக்கொண்டே, நம் முன்னோர் எவ்வாறு வாழ்ந்தனர், எத்தகைய வீர செயல்களைப் புரிந்தனர், எந்தக் கடவுளரை வணங்கினர் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

சங்க காலம் தொட்டு, நம் இலக்கிய நூல்கள் பெரும்பாலும் இந்து மதம் என்று அழைக்கப்படும் சனாதன தர்மத்தையே சார்ந்து  இருந்தன.  ஆனால், இன்று நாம் நமது தலைமுறையை (ஏன், நம் பெற்றோரின் தலைமுறைக்கூட) கேட்டால், தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் "மத சார்பற்றவை" என்றே கூறுவார்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் வந்த பிறகுதான் இது மாறியது என்றும் கூறுவார்கள். இந்த உண்மைக்குப் புறம்பான கருத்து மாற்றத்தின் பின்னணி என்ன? பல ஆண்டுகளாக நமது இலக்கியத்தில் வரும் இந்து மதக் கருத்துக்கள், பகுத்தறிவுப் பாசறைகளால் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டதால் வந்த விளைவுதான் இது.  இந்தப் பதிவில் நமக்கு தெரிந்த, நமது பாட புத்தகத்தில் வந்த இலக்கியங்களை நான் இதற்கு ஆதாரமாக தருகிறேன்.

1. பெரும்பாலும் பெரியவர்கள் பள்ளிக்குச் சென்று படிக்காதவர்களை "இவனுக்கு ஆத்திசூடிக் கூடத் தெரியாது" என்று கூறுவார்கள். அந்த ஆத்திச்சூடியிலிருந்து ஆரம்பிப்போம். இந்த நூலிற்கு "ஆத்திசூடி" என்ற பெயர் ஏன் வந்தது? என்றாவது நமது தமிழாசிரியர்கள் நமக்கு இதைக் கூறியிருப்பார்களா? அல்லது, நமது பாடப் புத்தகத்தில் தான் இருந்ததா? இந்தக் கேள்வியின் விடை இதோ.

நமது பண்பாட்டின் படி அனைத்து நூல்களும் இறை வணக்கத்துடன் தான் தொடங்க வேண்டும். ஔவையார் இந்த நூலிற்கு எழுதிய இறை வணக்கபாடல்: "ஆத்திச்சூடி அமர்ந்த தேவனை ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே". இதன் பொருள்:  ஆத்திப்பூவை சூடியிருக்கும் சிவபெருமானுக்குப் பிடித்த (அமர்ந்த) தெய்வமான விநாயகப் பெருமானை வணங்குவோம். பெயரிடப்படாத (பெயர் தெரியாத) இந்த நூலிற்கு அதன் இறைவணக்கத்தின் முதற் சொல்லையே பெயராக இட்டனர்.

மேலும், ஆத்திசூடியில் 12 வரிகள் தான் நமக்குத்தெரியும். ஆனால், மொத்தம் அதில் 108 வரிகள் என்பது நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட மற்றொரு உண்மை. 108 என்பது இந்து மதத்தில் ஒரு முக்கியமான எண்ணிக்கை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும், அதில் வரும் ஒரு வரி "திருமாலுக்கு அடிமை செய்" என்பது. ஆக, 108யும் காட்டிவிட்டால், 108 என்ற எண்ணிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டும். "திருமாலுக்கு அடிமை செய்" போன்ற வரிகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். செக்யுலரிசம் செத்து விடும் இல்லையா?  எனவே, 12-ஐ மட்டும் காட்டினர்.

2. நாம் அனைவரும் சிறுவராய் இருந்த பொழுது படித்த மற்றொரு மறக்க முடியாதது "ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்" என்று தொடங்கும் உலகநீதி என்ற நூலின் வரிகள். இதில் மொத்தம் 13 செய்யுள்கள் உள்ளன (அல்லது நமக்கு இப்பொழுது 13 செய்யுள்கள்தான் கிடைத்துள்ளன என்றும் வைத்துக்கொள்ளலாம்). அதில் வரும் முதல் செய்யுளை மட்டும் இங்கு கொடுத்துள்ளேன். 
"ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம் 
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் 
    வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் 
போகாத இடந்தனிலே போக வேண்டாம் 
    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் 
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் 
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே"

கடைசி இரண்டு வரிகளை மீண்டும் படிக்கவும். அந்த நூலில் உள்ள அனைத்து செய்யுள்களுமே முருகப்பெருமானின் புகழைப்பாடியே முடிகின்றன. கடைசி இரண்டு வரிகள் நமது பாடப் புத்தகங்களில் நீக்கப்பட்டிருக்கும்.

3. இது ஒரு விவகாரமானப் பகுதி. நமது பகுத்தறிவுப் பாசறைகள்  திருவள்ளுவர் ஒரு சமணர் என்று நிரூபித்து விட்டனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை? திருவள்ளுவரைப் பற்றி வரலாற்று சான்று எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பெரும்பாலும், அவர் சமணர் என்பதற்கு அவருடைய திருக்குறளிலிருந்தே சான்றுகள் தரப்படுகின்றன. அவை அனைத்துமே அவர் சமணர் தான் என்பதை தெளிவாக நிரூபிக்க இயலாதவை.

திருக்குறளில் இந்து மதக் கடவுளரையும், இந்து மதக் கருத்துக்களையும் குறிக்கும் பல குறள்கள் உள்ளன. இவற்றை நம் பகுத்தறிவுப் பாசறைகள் தெரிந்தாலும் தெரியாததுபோல நடிப்பார்கள். அவற்றுள் சில:

1. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் தான் இம்மூன்றும் இதே வரிசையில் வருகின்றன (தர்மார்த்த காம மோக்ஷம்...). இந்து மதத்தில், அளவோடு, தம் மனைவியோடு மட்டும் கொள்ளும் காமம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.சமண மதத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று "அபரிக்ரஹா" என்பதாகும் - அதாவது, காமம் அற்றத் தன்மை. திருவள்ளுவர் சமணர் என்றால் அவர் சமண மதத்திற்குப் புறம்பான காமத்துப்பாலை ஏன் எழுதினார்?

2. திருக்குறளும், மனுஸ்ம்ரிதியும்
மனுஸ்ம்ரிதி - 9.12:
அரக்ஷிதா க்ருஹே ருத்தா: புருஷைர் ஆப்தகாரிபி:|
ஆத்மனாம் ஆத்மனா யாஸ் து ரக்ஷேயுஸ் தா: சுரக்ஷிதா: ||
வீட்டிற்குள் நன்கு நம்பத்தகுந்த வேலையாட்களைக் கொண்டு காவலில் வைக்கப்படுவது பெண்களுக்குக் காவலல்ல. அவர்கள், மனத்தால் பிறழாமல் தமக்குத் தாமே காவலாய் இருப்பதே தகுந்த காவலாகும்.

திருக்குறள் - 57 இதே கருத்தை அப்படியே கூறுகிறது :
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

மனுஸ்ம்ரிதி - 3.78:
யஸ்மாத் த்ரயோ அப்யாஷ்ரமினோ ஞானே அன்னேன ச அன்வஹம் |
க்ருஹஸ்தேன ஏவ தார்யந்தே தஸ்மாஜ் ஜ்யேஷ்டாஷ்ரமோ க்ருஹீ ||
(ப்ரஹ்மசாரி, சந்யாசி மற்றும் வானப்ரஸ்தம் என்ற) மற்ற மூன்று ஆஷ்ரமங்களில் உள்ளவர்களும் தமது அறிவிற்காகவும், உணவிற்காகவும் இல்லறமாகிய க்ருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ளவர்களையே நம்பி இருப்பதால், இல்லறம் என்றழைக்கப்படும் கிருஹஸ்தாச்ரமம் அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

திருக்குறள் 41 மற்றும் 42 இதே கருத்தை அப்படியே வலியுறுத்துகின்றன:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இரந்தார்க்கு
இல்வாழ்வான் என்பான் துணை (42)

மேலும், சமண மதத்தில் (ப்ரஹ்மசர்யம், க்ருஹஸ்தம், வானப்ரஸ்தம் மற்றும் துறவறம் என்னும்) நான்கு சமுதாய வழிமுறைகள் இல்லை. இவை வேதங்களில் (மற்றும் அதை சார்ந்த மனுஸ்ம்ரிதி போன்ற இந்து நூல்களில்) மட்டுமே உள்ளது.

மனுஸ்ம்ரிதி - 2.218:
யதா கணன் கனித்ரேன நரோ வார்யதிகச்சதி |
ததா குருகதாம் வித்யாம் ஷுஷ்ரூஷுர் அதிகச்சதி ||
எவ்வாறு மண்வெட்டியைக் கொண்டு மண்ணில் தோண்டும் மனிதனுக்குத் தோண்டுமளவும் தண்ணீர் கிடைக்கிறதோ, அவ்வாறே தனது குருவிடம் பணிவாக உள்ள ஒருவனுக்கு அறிவு கிடைக்கிறது.

திருக்குறள் - 396:
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்தூறும் அறிவு.

3. திருக்குறளில் இந்து கடவுள்கள் பற்றிய குறிப்புகள் :
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் 
தாஅய தெல்லாம் ஒருங்கு (610)  
இங்கு அடியளந்தான் என்பது மூவுலகையும் தனது அடியால் அளந்த வாமன அவதாரத்தைக் குறிக்கும்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் 
இந்திரனே சாலுங் கரி (25)
இங்கு இந்திரனைக் குறிப்பிடுவதோடு நிறுத்தாமல் அவனை விசும்புளார் (தேவர்களின்) கோமான் (அரசன்) என்று தெளிவாகக் கூறுகிறார்.

அகன் அமர்ந்து செய்யாள் உறையும்-முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல் (84)
 இந்தக் குறளில் செய்யாள் என்பது சிவந்த நிறமுடைய திருமகளைக் குறிக்கும். இதை நான் கூறவில்லை -  பகுத்தறிவுப் பாசறைகளின் தலைவர் திரு. கருணாநிதிஅவர்களே தன் திருக்குறள் உரையில் கூறியுள்ளார். அவர் பல குறள்களுக்குப் பகுத்தறிவு சொட்ட சொட்ட உரை எழுதியுள்ளார். அவரால் கூட இந்த மாதிரி ஓரிரு குறள்களுக்கு பகுத்தறிவுச் சாயம் பூச முடியவில்லை (பெயிண்டு தீர்ந்திடிச்சி போல).

அடுத்ததாக, கொடுங்கோல் அரசன் ஆட்சியில் என்னென்ன கெடுதல்கள் வரக்கூடும்? வள்ளுவரின் கூற்றுப்படி,
ஆ பயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனில் (560)
அறுதொழிலோர் என்றால் (வேதம்) ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல்  வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய ஆறு  செயல்களை மட்டுமே செய்யக்கூடிய அந்தணர்களைக் குறிக்கும். நூல் என்பது வேதங்களைக் குறிக்கும். கொடுங்கோல் அரசனின் ஆட்சியில் பசுக்கள் பால் பொழியாது. அந்தணர்கள்  வேதம் ஓதமாட்டார்கள். இது "கோ ப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம்....." என்னும் வேத வாழ்த்தொலியை ஒத்து இருக்கிறது (வேதங்கள் பசுக்களும், அந்தணர்களும் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்துகிறது. திருக்குறளோ, கொடுங்கோல் அரசனின் நாட்டில் இவை இரண்டும் குறையும் என்று எச்சரிக்கிறது). சமணரான திருவள்ளுவர் ஏன் அந்தணர்கள்  வேதத்தை மறப்பதை ஒரு பெரிய கேடாகக் குறிப்பிட வேண்டும்?

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் 
தாமரைக்கண்ணான் உலகு.
காதலைப் பற்றிப் பேசும்போது கூட இந்து மதத்திலிருந்து தான் மேற்கோள் காட்டுகிறார் வள்ளுவர். தமது காதலியின் தோள்களை அணைப்பதை விட வைகுண்டம் பெரிதா என்று  கூறுகிறார்.
தாமரைக்கண்ணன் என்பது திருமாலிற்கு மட்டுமே இடப்படும் சிறப்புத் திருநாமம். திருநெல்வேலி நவதிருப்பதியில் ஒரு கோயிலில் பெருமாளுக்கு செந்தாமரைக்கண்ணன் என்றே பெயர்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். உண்மை இவ்வாறு இருக்க, பள்ளிப்பாடங்களில் அரசியல் ஆதாயத்திற்காக முறையற்ற கருத்துக்களையும் அரைகுறையான செய்யுள்களையும் கற்றுக்கொடுக்கும் இந்த "போலி மதச்சார்பின்மையும், உண்மையை மறைக்கும் கண்மூடித்தனமான மொழிவெறியும்" நமக்குத் தேவைதானா?

நமது குழந்தைகளுக்கு நமது இலக்கியங்களையும், வரலாற்றையும் கசடறக் கற்றுத்தருவோம்.

Wednesday, July 29, 2015

ஹிந்து மதத்தில் அறிவியல்!!!

 ஹிந்து  மதம் என்றழைக்கப்படும் "சனாதன தர்மம்" மிகவும் பழமையான மதமாகும். இதை மதம்  என்று கூறுவதைவிட வாழ்க்கை நெறி என்று அழைப்பதே  பொருத்தமாகும். இதில் இருக்கும் அளவிற்கு தத்துவங்களும் அறிவியல், இயற்கை  உண்மைகளும் வேறு மதங்களில் பெரிதாகக் காணப்படவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. உதாரணமாக, சுமார் 400, 500 வருடங்களுக்கு முன்பு வரை மேற்கத்திய நாடுகள் "உலகம் தோன்றியது கி.மு. 4400-ல்" என்றே நம்பி வந்தனர். ஆனால், அன்றும் சரி, இன்றும் சரி, உலகம் தோன்றி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டது என்று ஆணித்தரமாகக் கூறிய ஒரே மதம் நமது ஹிந்து மதம் ஒன்றே. நமது முன்னோர்கள் ஆன்மிகம், அறிவியல் மற்றும் உளவியல் ஆகிய மூன்றிலுமே சிறந்து விளங்கினர்.  எனவே தான் பல அறிவியல் உண்மைகளை சாமானிய மக்களும் அறிந்து கொள்ளக்கூடிய நோக்கில் தொகுத்து வைத்தனர். அதில் உள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை இங்கு காண்போம்.

இந்த பிரபஞ்சத்தின் (அண்டத்தின்) படைப்பையும், அழிவையும் குறித்து அனைத்துப் புராணங்களும், உபநிடதங்களும் ஏறக்குறைய ஒன்று போலவேக் கூறிகின்றன.  (இந்த  உலகில் நாம் காணும் அறிவுள்ள மற்றும் அறிவற்ற) அனைத்திற்கும் மூலப்பொருள் என்பது "மூலப்ரக்ருதி" என்பதாகும். அதிலிருந்தே அனைத்தும் தோன்றியது. 

இங்கே நாம், நமது புனித நூல்கள் (வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்கள்) தெரிவிக்கும் ஒரு நுண்ணிய கருத்தை நோக்கவேண்டும். இன்றைய அறிவியல் அனைத்தையும் உயிருள்ள, உயிரற்ற பொருட்களாகப் பிரிக்கும். உதாரணமாக, கல், மண் போன்றவை உயிரற்றவை. மரம், செடி, கோடி, மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் ஆகியவை உயிருள்ளவை. நமது நூல்களோவெனில், இவற்றை சற்றே வித்தியாசமாக, அறிவுள்ள மற்றும் அறிவற்ற பொருட்களாகப் பார்க்கும். உயிரற்ற அனைத்தும் அறிவற்றவையே (கல், மண் போல).  ஆனால், அறிவியல் உயிருள்ளதாகப் பார்க்கும் பொருட்களையும் இரண்டாகப் பிரித்தனர் நமது முன்னோர் . நம்மையே எடுத்துக்கொள்வோம்: நமது இந்த உடலானது அறிவற்றது. அதற்குள் இருக்கும் ஆத்மாவே அறிவுடையது. இதை எப்படி அறியலாம் என்றால், இந்த உடலுக்குள் ஆத்மா இருக்கும் வரை ஒருவரை நாம் "எப்படி இருக்கிறார்?" என்று உயர்திணையில் பேசுகிறோம். ஆத்மா வெளியேறி  விட்டபிறகு, அந்த உயிரற்ற உடலை "இதை எப்பொழுது  எடுக்க போகிறார்கள்?" என்று அஃறிணையில் குறிக்கிறோம். எனவே, உடல் என்பது அஃறிணைப்   பொருள் (அறிவற்றது). ஆனால், அறிவியலும் சரி, நமது புராணங்களும், உபநிடதங்களும் சரி, அனைத்துமே ஒரே மூலப்பொருளில் இருந்தே தோன்றியது என்று கூறும்.

மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருவோம். மூலப்ரக்ருதியிலிருந்து மஹத் (அல்லது மஹான் என்றும் கூறுவர்கள்) தோன்றும், மஹத்திலிருந்து அஹங்காரம் (consciousness), அஹங்காரத்திலிருந்து நாம் காணும் (காணும் என்றால், கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தொட்டு, உணரும்) அனைத்தும் தோன்றுகின்றன. இதில் முதலில் தோன்றுவது "சப்தம்" என்னும் தன்மை (இதை தன்மாத்திரை என்று கூறுவர்கள்). இன்றைக்கு அறிவியல் இதை 100% ஒத்துக்கொள்கிறது. "Big Bang Theory"யை நிரூபிப்பதற்கு, 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட "Cosmic Microwave Background Radiation" ஒரு முக்கிய பிரமாணமாக இன்றும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. சப்தம் என்றால் நாம் கேட்கும் ஒலி  மட்டுமல்ல, அனைத்து அதிர்வுகளும், அலைகளும் சப்தங்களே (vibration).

சப்தத்திலிருந்து முதலில் ஆகாயம் தோன்றியது. பிறகு, ஸ்பரிசம் எனும் தொடு உணர்ச்சி தோன்றியது. அதிலிருந்து, காற்று. பின்னர், உருவம். அதிலிருந்து தீ. சுவை, அதிலிருந்து நீர். கடைசியாக மணம், அதிலிருந்து நிலம். இந்த ஐம்பூதங்களின் வெவ்வேறு சேர்க்கையே (நமது பூமி மட்டுமல்ல) இந்தஅண்டம் முழுவதும். ஐம்பூதங்களில் (வான், காற்று, தீ, நீர், நிலம்), நீர் மற்றும் நிலம் தோன்றிய வரிசையை மட்டும் அறிவியல் ஒத்துகொள்வதில்லை. மற்றவைகளை, அறிவியல் அப்படியே ஒத்துகொள்கிறது.
 
அண்டத்தின் அழிவைப்பற்றியும் புராணங்களும், உபநிடதங்களும் விரிவாகக் கூறும். இதன் அழிவு, இது எவ்வாறு தோன்றியதோ, அந்தத் தோற்றத்தின் பின் வரிசையில் செல்லும். நிலம் நீரில் கலக்க, நீர் தீயில் கலக்க, தீ காற்றில், காற்று ஆகாயத்தில், முடிவில் அனைத்தும் மூலப்ரக்ருதியில் சென்று முடியும். அண்டத்தின் அழிவைப்பற்றி  அறிவியலில் பல கருத்துக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, "Big Bang" என்பதைப்போல அனைத்தும் "Big Crunch" என்பதில் ஒடுங்கிவிடும் என்பதாகும். இது, நமது புராணங்களும், உபநிடதங்களும் கூறும் கருத்தை ஒத்துப் போகிறது.

குறிப்பு: மூலப்ரக்ருதியுடன் நிற்காமல், புராணங்களும் உபநிடதங்களும் இவை அனைத்துமே பரம்பொருளிடமிருந்து தோன்றி, மறையும் என்று கூறுகின்றன. அறிவியல் இதை ஒப்புக்கொள்ளாது. ஆனால், அந்த அறிவியலுமே, இந்த அண்டத்தின் தோற்றுவாய் (Point of Singularity, which is origin of this universe) எதில் லயித்திருக்கிறது என்று கூறமுடியாமல் தவிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த தன்மாத்திரைகளுக்கும், ஐம்பூதங்களுக்கும், நமது ஐம்புலன்களுக்கும் தொடர்பு உள்ளது. சப்தத்திற்கு செவி, தொடு உணர்ச்சிக்குத் தோல், உருவத்திற்குக்  கண், சுவைக்கு நாக்கு, மணத்திற்கு மூக்கு. நமது வழக்கில் ஒரு பழமொழி உள்ளது "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கும்", அதாவது நமது உடலும், இந்த பிரபஞ்சமும் தொடர்புடையவை என்று. பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது சப்தம் என்று பார்த்தோம். நமது உடலிலும் முதலில் தோன்றும் புலன் "கேள்விப் புலன் அல்லது செவிப் புலனே". புராணங்களில் பிரஹலாதன்  கதையிலும், மகாபாரதத்தில் அபிமன்யுவின் கதையிலும் இந்த கருத்து வெளியிடப்படுகிறது.

இதை அறிவியலும் ஒத்துக்கொள்கிறது. பார்க்கவோ, சுவைக்கவோ, முடியாத நிலையில், கருவில் "உருவாகிக்கொண்டிருக்கும்" குழந்தைக்குக் கூட கேட்கும் திறன் உருவாகிவிடுகிறது. 

எவ்வாறு அண்டம் அழியும் பொழுது இறுதியில் ஆகாயம் அழிகிறதோ, அதைப்போலவே, இந்த உயிர் உடலைவிட்டுப் பிரியும் பொழுதும், இறுதியாக நீங்கும் புலன் "செவிப் புலனே". இதை எந்த கதையின் வாயிலாகவும் கூறவில்லை. ஆனால், இறந்த பிறகு (சில சமயம் இறக்கப் போகிறார் என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு) "கர்ண மந்திரம்" என்ற ஒரு சடங்கு உள்ளது. இதில், இறக்கும் தருவாயில் இதைக் கேட்கும் ஆத்மா நல்ல கதியை அடைய வேண்டும் என்பதற்காக, இறந்தவரின் (அல்லது இறக்கப் போகிறவரின்) காதுகளில் தெய்வத்தின் பெயர்களை உச்சரிப்பார்கள். காசியில் இறந்தால் முக்தி என்று கூறுவதும் இந்த காரணத்தைக் கொண்டே. அங்கு இறப்பவரின் காதுகளில் பகவான் ஸ்ரீ விஸ்வநாதரே "ராம, ராம, ராம..." என்ற தாரக மந்திரத்தை "கர்ண மந்திரமாக" உரைப்பார் என்று நம்பப்படுகிறது (இதை நம்மால் நிருபிக்க இயலாது; ஏனெனில், கண்டவர் சொன்னதில்லை, சொன்னவர் கண்டதில்லை).

இதையும் பல மருத்துவர்கள் கூறியுள்ளனர். அனைத்து நினைவையும் இழந்து "Coma" வில் இருப்பவர்கள் கூட, தமது கேட்கும் திறனை இழப்பதில்லை. இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்குக் குறிப்பாக கேட்கும் திறன் அதிகரிக்கும் என்றும், தானிருக்கும் அறை மட்டுமல்லாது, சற்று தொலைவில், மற்ற அறையில் இருப்பவர்கள் பேசுவதும் கேட்கும் என்று சில மருத்துவர்களும், இறந்தவர்களுடன் கடைசி நிமிடங்களில் பணியாற்றிய செவிலிகளும் (Nurses) கூறுகின்றனர். இதை நிரூபிப்பது கடினம், ஏனெனில், உயிர் பிரிந்த எவரும் வந்து நம்மிடம் நடந்ததைக் கூற இயலாது. ஆனால், Google search செய்தால், இத்தகைய பல செய்திகளை நாம் படிக்கலாம்.

ஆக, புராணங்களும், உபநிடதங்களும் ஏதோ பொழுது போக்காக உருவானவை அல்ல. அவை அறிவியல் மற்றும் மனவியலை உள்ளடக்கிய ஆன்மீகப் புதையல்கள். நமக்கு புரியவில்லை என்பதற்காக அவற்றை எள்ளி நகையாடுவதாலோ, மதிக்காமல் இருப்பதாலோ நஷ்டம் நமக்குத்தான். இவற்றை தகுந்த குருவின் மூலம் கற்று, கேட்டு, புரிந்து கொள்வதிலேயே நமது முன்னேற்றம் உள்ளது.

Tuesday, June 9, 2015

இந்து மதம் திணிக்கப்பட்டதா?

வெகு நாட்களுக்குப் பிறகு  எனதுப் பதிவை மறுபடியும் தொடங்குகிறேன். இந்த முறை வாரம் ஒரு பதிவாவது செய்ய முயற்சிக்கிறேன். எனது  இன்றைய தலைப்பும், பதிவும் எனது நண்பன்  ஒருவன் WhatsApp-ல் எனக்கு அனுப்பிய சில கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனது நண்பனின் கருத்து: பாரதம் என்பது ஒரு தேசம் அல்ல. அது ஒரு சில மாநிலங்களின் தொகுப்பு மட்டுமே. அது இந்தியா - ஹிந்தியா அல்ல. வெள்ளையர்கள் தம்மை விட கருமையாக இருந்த அனைவரையும் "இண்டீஸ்" என்றே அழைத்தனர். செவ்விந்தியர், மேற்கு இந்தியர், மற்றும் ஆஸ்திரேலியாவில்...எனவே இந்து மதம் என்பதே ஓர் பெரிய சமூகத்தின் மேல் திணிக்கப்பட்ட ஒன்று.

Original contents from my friend: First of all Bharath was collection of states. India not Hindia. White people called the gray or black as indies...like Red Indians, West Indies, in Australia (??). So Hindu is imposed on the very big crowd.

குறிப்பு: ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர் உள்ளனர். அவர்களை இந்துக்கள் என்றோ இந்தியர்கள் என்றோ அழைப்பதில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் 40000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவில் இருந்து படகுகள் மூலம் வந்ததாகக் கூறிகொள்கின்றனர். நான் ஆஸ்த்ரேலியாவில் இருந்த பொழுது (1997 - 1999) ஒரு தமிழ் நண்பர் Queensland University-இல் தமிழுக்கும், aborigines எனப்படும் ஆஸ்த்ரேலிய  பழங்குடியினரின் மொழிக்கும் உள்ள தொடர்பை குறித்து முனைவர் ஆராய்ச்சி (Doctorate) செய்துகொண்டு இருந்தார். இது குறித்து இன்னமும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  

இந்த கருத்து இன்று எனக்கு எனது நண்பன் மூலமாக வந்தாலும், பெரும்பாலான குத்தறிவுப் பாசறைகள் (இவர்களை இனி சுருக்கமாக பப்பா அல்லது பப்பாக்கள் என்று அழைப்போம்) வெகு காலமாக முழங்கிக்கொண்டு  வருகிறார்கள்.இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று பார்ப்போமா?

உண்மை என்ன? இந்து மதத்திற்கு பெயரே கிடையாது. சனாதன தர்மம் என்றே இது வழங்கப்பட்டு  வந்தது. சிந்து நதிக்கு அப்பால் இருந்ததால் இந்த மக்களை இந்துக்கள்  என்று அழைத்தனர். அதுவே, நமது மதத்திற்கும் பெயராகி விட்டது. இதை யாரும் யார் மேலும் திணிக்க வில்லை. ஆங்கிலேயர்கள் தமது பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு அங்கமாக திராவிடர்களே இந்தியா முழுவதும் இருந்ததாகவும், தேரின் மீது ஏறி வந்த ஆரியர்கள் திராவிடர்களை ஓட ஓட விரட்டியதாகவும், பின்னர் தமது "வேத மதத்தை" அனைவரின் மீதும் புகுத்தியதாகவும் கதை கட்டி  விட்டனர். மேலும், தமது கிறித்துவ மதத்தைப் பரப்ப அவர்களுக்கு ஒரு வழி வேண்டி இருந்தது.  அந்த கால கட்டத்தில் இருந்த வேறுபாடுகளை நன்றாகப் பயன்படுத்தி, நீங்கள் கடைபிடிக்கும் இந்து மதமே உங்கள் மேல் திணிக்கப்பட்ட மதம் தான். நாங்களும் திணித்தால் என்ன என்றார்கள்.

ஆனால், அவர்களுக்கே தெரியாது நமது பப்பாக்கள் அதை இத்தனை காலம் நம்பிக் கொண்டு இருப்பார்கள் என்று. அவர்களுக்கு வியாபாரம்  முடிந்தது,வேறு கதை கிடைத்துவிட்டது. பப்பாக்களோ  இன்றும் இந்த கட்டுக்கதையை நம்பி கொண்டு தமது வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். 

நான் கேட்கிறேன்... முறத்தால் அடித்துப் புலியைத் துரத்திய வீரப் பெண்மணிகளைக் கொண்ட நமது சமுதாயம் தோற்றோடி வந்திருக்குமா? அல்லது வெற்றி அல்லது வீர மரணம் என்று உயிரை விட்டிருப்போமா? ஆரியர்கள் தேர் மீதும் குதிரை மீதும் வந்ததால் அவர்களுக்கு வெற்றி எளிதானது என்று கூறுகிறோமே? கடல்கோள் வந்து அழிந்து போன குமரிக்கண்டத்தில், கபாடபுரத்தில், இரண்டாம் தமிழ் சங்கத்தை வளர்த்த அரசர்களுக்குள் "வெண்தேர் செழியன்" என்ற மன்னனின் பெயர் வருகிறதே, அப்படியென்றால் திராவிடர்களுக்கு தேரைப்பற்றியும்,குதிரையைப் பற்றியும் தெரியாமலா போயிருக்கும். இல்லை, வெண்தேர் செழியனது தேரை  குதிரைகள் அல்லாமல் கரப்பான் பூச்சிகள் இழுத்தனவா? இன்றைய புதிய ஆராய்ச்சிகள், இந்த ஆரிய ஆக்கிரமிப்புக் கட்டுகதையை பொய்யாக்கிவிட்டன. அனால் நமது பப்பாக்களுக்கு வேறு வேலை எதுவும் செய்யத்தெரியாதே.  ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவரைக் குறிக்கும் சொற்களே. இதில் வேறு நாட்டவர், துரத்திவிட்டனர் என்பதெல்லாம் பொய் என்றாகிவிட்டால் பப்பாக்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள். அதனால் தெருத்தெருவாக இந்த பொய்களை உண்மையைப்போலவே கூவிக்கொண்டு திரிகின்றனர்.

அடுத்தது மதத்  திணிப்பைப் பற்றிப் பார்ப்போம். (மூன்றாம்) சங்க இலக்கிய காலத்தில் இந்து மதம் தமிழகத்தில், பரவலாக இருந்தது என்பது அந்த இலக்கியங்களை, வேறு விகாரமான எண்ணங்கள் இல்லாமல், உண்மையை அறியும் நோக்கில் படிப்பவர்களுக்கு "உள்ளங்கை நெல்லிக்கனி" என விளங்கும். சில உதாரணங்கள்:

1. ஐந்திணைகள் என்பது தமிழுக்கு மட்டுமே உரியது. வேறு எந்த இலக்கணத்திலும் இவ்வாறு  இல்லை. இந்த ஐந்து தினைகளுக்குமே ஆரிய, இந்து கடவுள்களையே கடவுளாகக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

2. எட்டுத்தொகை நூல்களில், ஏழு நூல்களுக்கு கடவுள் வாழ்த்தாக இந்துக் கடவுளரே துதிக்கப்படுகின்றனர் (புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து - சிவன்; குறுந்தொகை - முருகன்;நற்றிணை, ஐங்குறுநூறு - திருமால்). பரிபாடலின் கடவுள் வாழ்த்துப் பாடல் கிடைக்கவில்லை, ஆனால், அந்நூலில் திருமால் பெருமைகளும், சேயோன் (முருகன்) பெருமைகளும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. தங்கள் மேல் திணிக்கப்பட்ட ஆரியரின் புராணங்களிலும், இதிகாசங்களிலும் வரும் செய்திகளை தமது இலக்கியத்தில் சேர்த்திருப்பார்களா? (குறிப்பாக நற்றிணையின் கடவுள் வாழ்த்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் "பூ: பாதௌ, யஸ்ய நாபிர்..." என்ற ஸ்லோகத்தின் பொருளை ஒற்றி உள்ளது)

3.  பரிபாடலில் சாம வேதத்தின் திரண்ட பொருள் என்ற தலைப்பிலேயே பாடல் ஒன்று வருகிறது. தங்களை தோற்கடித்து துரத்திய ஆரியரின் மதத்தையும், அவர்களது வேதங்களையும் புகழ்ந்திருப்பர்களா?

4. எந்த சங்கப்பாடலிலும் சிந்து நதியைப்பற்றிய குறிப்பு காணப்படவில்லை. கங்கை நதி பற்றி ஒன்றிரண்டு குறிப்புகள் காணப்படுகின்றன. தாங்கள் சிந்து நதிக் கரையிலிருந்து வந்திருந்தால் அந்த நதியை ஒரே அடியாக மறந்திருப்பார்களா என்ன?

5. மிக முக்கியமான குறிப்பொன்று நமது கண் முன்னாலேயே உள்ளது. நாம் அனைவரும் "கடியலூர் உருத்திரங் கண்ணனார்" என்ற புலவர் பெயரைக் கேள்விப்பட்டிருப்போம். அவரது பெயரின் பொருள் என்ன? அது ருத்ராக்ஷம் என்ற வடமொழி சொல்லின் நேரடி தமிழாக்கமே ஆகும் (உருத்திரன் - ருத்ரன் என்பதன் தமிழாக்கம், கண் - அக்ஷம் என்ற வடமொழி சொல்லின் பொருள்). ஒரு வேளை  இவரது பெயரே  ருத்ராக்ஷம் என்பதன் தமிழாக்கமாக இருந்திருக்கலாம் அல்லது இவர் ருத்ராக்ஷம் அணிந்திருக்கலாம் (அதுவே அவரது பெயராகவும் ஆகி இருக்கலாம்).

ஏன்  நான் இந்த ஒரு பெயரை குறிப்பாகக் கூறுகிறேன்? நமது பப்பாக்களின் மற்றொரு வாதம், தமிழர்கள் தாங்களாக சில கடவுள்களை துதித்து  வந்தனர். தமிழர் போற்றிய கடவுளை வேத கால ருத்ரன் என்று ஆரியர்கள் திரித்துவிட்டனர் என்பது இவர்களின் வாதம். பெரும்பாலும் வடநாட்டில் மட்டுமே விளையும் ருத்ராக்ஷத்தை தனது பெயராக சங்கத்தமிழ்ப் புலவர் ஒருவர் கொண்டுள்ளார் என்றால் இது வரை பப்பாக்கள் கூறியது பொய் என்பது தெளிவாக விளங்குமன்றோ? இது தெரிந்ததாலோ என்னவோ, பப்பாக்கள் அனைவரும் இந்த புலவரின் பெயரை "உருத்திரம்" "கண்ணனார்" என்று பிரித்தேதான் கூறுவார்கள். நமது தமிழ் ஆசிரியர்களும் அவ்வாறே நமக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டும் உருத்திரன் என்று இல்லாமல் "ஏசை" என்றோ "சூசை" என்றோ  இருந்திருக்கட்டும். பப்பாக்கள் அனைவரும் சங்கத் தமிழுக்கு சிலுவை கட்டி இருப்பார்கள். ஏதோ தமிழ் தப்பித்தது.

6. அகநானூற்றிலும், புறநானூற்றிலும் சில இராமாயணக் காட்சிகளைப் பற்றிய வர்ணனைகள் வருகின்றன. இந்தபாடல்களில் உள்ள காட்சி அமைப்பும், கற்பனையும், வால்மீகி இராமாயணத்தில் இல்லை. எனவே, அக்காலத்தில், வால்மீகி இராமாயணத்தை தழுவாத தனிப்பட்டதொரு இராமாயணம் இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மேலும், பழைய மகாபாரதம் ஒன்றும் சங்க காலத்தில்  இருந்திருக்கிறது. பல எட்டுத்தொகை நூல்களுக்கு கடவுள் வாழ்த்து எழுதிய பெருந்தேவனார்க்கு "பாரதம் பாடிய பெருந்தேவனார்" என்ற பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாம் இராமாயணமும், மகாபாரதமும்  சங்க காலத்திற்கும் முன்பே தமிழகத்தில் பரவி இருந்ததை விளக்கும்.

7. பல இடங்களில் அந்தணர்கள் வேதங்களை ஓதி வந்தனர் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. தம்மை தோற்கடித்து துரத்தியவர்களின் வேதங்களை ஏன் தமிழர்கள் ஓத வேண்டும்?

8. "பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி" என்னும் மன்னனின் பெயரிலேயே இவன் யாகங்களை செய்தான் என்பது விளங்கும்

இவை எல்லாம் "ஒரு சோறு"  மட்டுமே. மற்ற சங்க இலக்கியங்களை (காமாலைக் கண் இல்லாமல்) சற்றே புரட்டினால் கூட  "பல பானை சோறுகள்" கிடைக்கும்.

9. மேலும், வடமொழி புராணங்களும் வேதங்களும் வேதாந்தங்களும் தென்னாட்டவரை வெறுப்புடனோ, ஏளனமாகவோ கூறவில்லை. ஆக, தோற்றவனும் வென்றவனை வெறுக்கவில்லை....வென்றவனும் தோற்றவனை கேலி பேசவில்லை....இந்த போர் உண்மையிலேயே நடந்ததா? அவ்வாறே போர்கள் நடந்திருப்பினும் அவை ஆரிய, திராவிட இனங்களின் போராட்டமா? அல்லது ஏதோ போருக்கு நாம் "இனப் போர்" சாயத்தை பூசிவிட்டோமா?

பப்பாக்களின் கேள்வி: தமிழர்கள் இயற்கையை மட்டுமே வழிபட்டனர். அவர்கள் இந்துக்கள் என்று எப்படி கூறுகின்றீர்கள்?

சங்க காலத்திற்கும் முற்பட்ட தமிழர்கள் இந்து மதத்தை அல்லாத இயற்கையை வழிபட்டனர் என்பதற்கு ஏதேனும் சான்று உள்ளதா? இல்லை. இயற்கையை வழிபடுதல் என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு அடிப்படை கொள்கை. வேதத்தில் கூட பரம்பொருளைப் பற்றி கூறும் முன்பே அக்னி, இந்திரன், வருணன், சரஸ்வதி (ஆறு) ஆகியவர்களின் துதி வருகின்றது. இன்றைக்கும் அந்தணர்கள் தினமும் செய்யும் "சந்தியா வந்தனம்" என்பது இயற்கை வழிபாடே (அதில் சூரியனையே வணங்குகிறார்கள்). தொல்காப்பியத்தின் மேற்கோளின் படி ஐந்திணைகளின் கடவுளராக  இந்துக் கடவுள்களைக் குறிப்பிடுவதன் மூலம், தமிழர்கள் இந்து மதத்திற்கு உட்பட்ட இயற்கை வழிபாட்டையே செய்து வந்தனர் என்பது விளங்கும். 

நம் கண்முன்னே இத்தனை சான்றுகள் இருக்க, ஏன் பப்பாக்கள் இதை ஏற்க மறுக்கின்றனர்? ஏற்றுக்கொண்டால், அவர்களின் வியாபாரம் படுத்து விடுமே!! வேறு வேலையும் தெரியாதே!! என்ன செய்வது!! எனவேதான் அவர்கள் பொய்களை கூறி மக்களை ஏமாற்றும் வேலையை செய்கின்றனர். அறிவுள்ளவர் விழித்துக்கொண்டால் நாட்டுக்கு நல்லது. இல்லையேல் நமக்குத்தான் கேடு.

முடிவில், நானொரு விளக்கத்தைக் கூற விழைகிறேன். நான் இந்து மதத்திற்கு சார்பான பல சான்றுகளை கொடுத்துள்ளேன் - இதன் பொருள், சங்க காலத்தில் இந்து மதம் மட்டும் தான் இருந்தது என்பதில்லை. "தமிழர்கள் இந்துக்களே இல்லை, இந்து மதத்தை தமிழர்கள் மீது திணித்தனர்" என்ற (தவறான) வாதத்தை தகர்க்கத்தான் அந்த சான்றுகளை குறிப்பிட்டேன். சங்க காலத்தில் தமிழகத்தில் சமணர்களும், பௌத்தர்களும் இருந்துள்ளனர். அவர்கள் பல இலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளனர். 

Tuesday, October 8, 2013

மூன்று பெரியவர்கள்!!!

கடந்த சில நாட்களாக மூன்று முதிய அரசியல் தலைவர்களின் பெயர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக செய்திகளில் இடம் பெற்றன. அவர்களைப் பற்றிய ஒரு (தாமதமான) பதிவு.

அத்வானி (பா.ஜ.க):
ஒன்றிரண்டு முறை பிரதமர் பதவியை அடைய முடியாமல் போனவர். இந்த முறை இவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாதது என்னை போன்றவருக்கு சற்று ஏமாற்றமே!! என்னதான் 2009-ல் பாஜக தோற்றிருந்தாலும் அகில இந்திய அளவில் பெயர் பெற்ற தலைவர் இவர் தான். தன்னுடைய ஏமாற்றத்தை சற்றளவு சகித்துக்கொண்டு மோடியுடன் இவர் ஒன்றாக மேடையில் தோன்றுவது பாஜக-விற்கு நல்லதே!!

காமெடி பீஸ்: வாஜ்பாய் காலத்தில் ஆர்.ஸ்.ஸின்/ஹிந்துத்வாவின் கழுகு (RSS / Hindutva Hawk) என்று அத்வானியை கூறிய அனைவரும், இப்பொழுது அவரை (மோடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது) சமநோக்குள்ளவர் என்று கூறுகின்றனர். இப்போ கழுகு புறா அயிடிச்சா???

லாலு பிரஸாத் யாதவ் (ரா. ஜ. த):
இவரை மாடு முட்டிவிட்டது!!! 17 ஆண்டுகளுக்குப் பிறகு மாட்டுத்தீவன ஊழலில் ஐந்து ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். ஆனால், எனக்கென்னமோ, மோடி பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால், நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க-வுடனான தனது உறவை முறிக்காமல் இருந்திருந்தால், லாலுவிற்கு தண்டனை கிடைத்திருக்குமா என்பது சற்று சந்தேகமாக உள்ளது. இந்த தண்டனை நிதீஷை பாதிக்க வாய்ப்புள்ளது. லாலுவின் அனுதாப ஓட்டுக்கள் நிதீஷின் ஓட்டுக்களை பிரிக்கக் கூடும். (ஊழலில் சிறை சென்றவருக்கு ஏதடா அனுதாபம் என்று கேட்கிறீர்களா!! அப்படி என்றால் உங்களுக்கு இந்திய அரசியல் தெரியாது என்று அர்த்தம். வேறு செய்திகளைப் படிக்கவும்)

காமெடி பீஸ்: லாலு சிறையில் இருக்கும் பொழுது கட்சியை "அனுபவமற்ற" அவரது மகன் நடத்துவாரா அல்லது அவரது மனைவி (அதாங்க ஒரு காலத்துல முதலமைச்சராக கூட இருந்தாங்களே, அதே ராப்ரி தேவி தான்) நடத்துவாரா என்று குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் கடை முதலாளி ஜெயிலுக்குப் போயிட்டாலும் கல்லாப் பெட்டிய குடும்பத்துக்குள்ளேயே வெச்சிக்கனும் இல்லையா!! அதெல்லாம் சரி, பையனுக்கு அனுபவம் இல்லன்னு சொல்ராங்க - இது ஓகே. அம்மணிக்கு ரொம்ப அனுபவமோ?


மன்மோகன் சிங் (???):
இவர் எந்த கட்சி என்று தெரியவில்லை (எல்லாரும் இவரைத் தாக்கறாங்கப் பா). எதற்காக இன்னமும் பதவியில் இருக்கிறார் என்றும் புரியவில்லை. ஒரு சில ஊடகங்களில் இவர் பதவி ஆசை கொண்டவர் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், எனக்கென்னமோ அதை நம்ப முடியவில்லை. ஒரு வேளை நீங்கள் ராஜினாமா செய்தால் அது பா.ஜ.க-விற்கு சாதகமாகப் போய்விடும். நீங்களே ஒரு மதவாத கட்சி ஆட்சியில் அமர வழி செய்தார்போல் ஆகிவிடும் என்று யாரேனும் இவரை black-mail செய்கிறார்களோ என்னமோ - யார் கண்டது. மொத்தத்தில் தான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு இவர் நியாயமாக நடந்துக் கொள்ளவில்லை.

காமெடி பீஸ்: இவரே ஒரு காமெடி பீஸ். இவருக்கு தனியாக வேற எழுதனுமா!!! வேற ஆளப் பாருங்கப்பா....